வடக்கை விட்டு வெளியில் செல்ல முடியாது: நிபந்தனையுடன் தயா மாஸ்டருக்கு பிணை.!

தினமும் யாழ் பொலிஸ் நிலையத்தில் காலை 9 மணியில் இருந்து 12 மணிவரைக்குள் கையொப் பமிட்வேண்டும் எனவும் வட மாகாணத்தை விட்டு செல்ல முடியாது என்ற நிபந்தனையுடனும் நீதிமன்றத்தால் புலிகளின் முன்னாள் ஊடகத்துறைப் பொறுப்பாளர் தயா மாஸ்டர் பிணையில் நேற்று மாலை விடுதலை செய்யப்பட் டார்.
அங்கீகரிக்கப்பட்ட பிணையாளர்கள் நீதிமன்றத்தில் கையொப்பமிட்டதையடுத்தே அவர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த 2009 ஆம் ஆண்டு காலப்பகுதியில் புலிகளுடன் இணைந்து அரசுக்கெதிராக செயற்பட்டார் என குற்றம் சாட்டப்பட்ட இவருக்கு பயங்கரவாத செயற்பாடுகளின் கீழ் தொடுக்கப்பட்ட வழக்கில் வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி புதிய பிணை நிபந்தனையை கடந்தவாரம் விதித்திருந்தார்.
இந் நிலையில் ஒரு லட்சம் ரூபா பொறுமதியான நான்கு அரச உத்தியோகத்தர்களை கொண்ட பிணையிலும் ஐந்து லட்சம் ரூபா ரொக்கப்பிணையிலும் செல்ல நீதிமன்றம் நேற்று உத்திரவிட்டது.
இந் நிலையில் நான்கு அரச உத்தியோகத்தர்கள் நேற்று நீதிமன்றத்தில் கையொப்பமிட்டதுடன் பணமும் நீதிமன்றத்தில் செலுத்தப்பட்டது அதன் பின்னரே தயா மாஸ்டர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டார்.
Related posts:
|
|