வடக்கு விவசாயிகள் நெல் அறுபடையை முற்கூட்டியே திட்டமிடுவது உகந்தது – யாழ். பல்கலைகழக புவியியல்துறை விரிவுரையாளர் பிரதீபராஜா அறிவுறுத்து!

அடுத்தவாரம் மழையை எதிர்பார்க்க முடியும் என்பதால் விவசாயிகள் நெல் அறுபடையை முன்கூட்டியே திட்டமிடுவது உகந்தது. என யாழ். பல்கலைகழக புவியியல்துறை விரிவுரையாளர் பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் –
வடமாகாணத்தில் தற்போது பனி பொழிவு அதிகரித்துள்ளது. எனினும் எதிர்வரும் 9 ஆம் திகதி தொடக்கம் 13 ஆம் திகதிவரை வடமாகாணத்தின் பல பகுதிகளிலும் மிதமானது தொடக்கம் கனமானது வரை மழை பெய்யும் வாய்ப்புள்ளது.
தற்போதைக்கு வடமாகாணத்தின் உள்நில பகுதிகளில் குறிப்பாக ஏ-9 வீதியை அண்மித்த பகுதிகளில் இரவு வெப்பநிலை 17 செல்சியஸ்வரை குறைவடையகூடிய சாத்தியகூறுகள் உள்ளன எனவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
நிதி சேகரித்த 13 பேருக்கு எதிராக விசாரணை - சுவிட்சர்லாந்தின் பிராந்திய நீதிமன்றம்!
எரிபொருள் விலை குறைப்பு : பேருந்துக் கட்டணம் குறைக்கப்படுமா?
சிறுவர்கள் விடுதியில் பாரிய தீ விபத்து -10 சிசுக்கள் தீயில் கருகி பலி!
|
|