வடக்கு மாகாண சபை செயற்பாட்டுத் திறனற்ற சபையாக மாற்றமடைந்து வருகின்றது – ஈ.பி.டி.பியின் வடக்குமாகாண சபை எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா

Sunday, June 5th, 2016

வடக்கு மாகாண சபை­யா­னது இன்று ஆளும் கட்­சி­யி­னு­டைய உள்­ளக முரண்­பா­டு­களை தீர்த்துக் கொள்­வ­தற்­கான ஒர் இட­மாகக் காணப்­பட்­டு­வ­துடன் அச்­சபை செயற்­பாட்டு திற­னற்ற சபை­யாக தற்­போது மாற்­ற­ம­டைந்து வரு­கின்­றது என வட­மா­காண சபையின் எதிர்க்­கட்சி தலைவரும் ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.தவ­ராசா தெரி­வித்­துள்ளார்.

மேலும், மாகாண சபை­களில் பொது­வான விட­யங்கள், மக்­க­ளது பிரச்­சி­னைகள் தொடர்­பி­லுமே உரை­யா­டல்கள் இடம் பெற­வேண்டும் என அவர் சுட்டிக்­காட்­டி­யுள்ளார்.

குறித்த விட­யங்கள் தொடர்­பாக அவர் மேலும் தெரி­வித்­துள்­ள­தா­வது

வட­மா­காண சபை­யா­னது செயற்­பா­டற்ற செழிப்­பற்ற சபை­யா­க­வுள்­ள­மையை நான் பல முறை ஆதா­ரங்­க­ளுடன் சபை­யிலே சமர்ப்­பித்­தி­ருந்தேன். இந்­நி­லையில், தற்­போது நகைச்சுவை­யான விடயம் என்­ன­வெனில் ஆளும் தரப்பை சேர்ந்த குழு­வி­ன­ருக்­கி­டையே ஒருசிலர் ஆளும் தரப்புக்கு எதி­ரா­கவே நான் கூறிய அதே விட­யங்­களை குறிப்பிடுவதுடன், முன்னர் நான் கூறும்­போது அவற்றை எதிர்த்­த­மைக்­காக பகி­ரங்­க­மாக சபை அமர்­வு­களில் மன்னிப்பும் கோரியுள்­ளனர்.

இத்­த­கைய செயற்­பா­டு­க­ளா­னது செழிப்­பான செயற்­பாட்டுத் திறனடயை மாகாண சபை­யாக உரு­வா­கு­வ­தற்கு பொருத்­த­மற்­ற­தாகும்.

மாகாண சபை­யா­னது ஆக்­க­பூர்­வ­மான நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­ளும்­போது அதற்கு ஆதரவ­ளித்தும் தவ­றாக செயற்­ப­டு­கின்­ற­போது அதற்கு எதிர்ப்பு வெளி­யிட்டும் தவ­று­களை சுட்டிக்­காட்­டியும் நான் செயற்­பட்­டி­ருந்தேன்

ஆனால், இன்று ஆளும் தரப்பை சேர்ந்­த­வர்கள் அவர்­க­ளையே அவர்கள் எதிர்த்துக் கொள்கிறார்கள். அவ்­வாறு அவர்கள் எதிர்ப்­பது ஆக்­க­பூர்­வ­மான செயற்­பாட்­டிற்­கா­க­வல்­லாமல் தம்­மீது தாமே சேறு பூசு­வ­தற்­கா­கவே ஆகும்

பொது­வாக ஜன­நா­யக ரீதி­யான பாரம்­ப­ரி­யத்தில் ஒரே கட்­சி­யி­னு­டைய முரண்­பா­டு­களை சபையிலே கொண்­டு­வந்து தீர்க்­கக்­கூ­டாது. அவற்றை கட்சி மட்­டத்­தி­லேயே பேசி தீர்த்துக்கொள்­ள­வேண்டும். மாகா­ண­ச­பை­களில் பொதுவான விடயங்களும் மக்கள் பிரச்சினைகளுமே பேசப்படவேண்டும். ஆனால், இன்று வடமாகாண சபையில் ஆளும் கட்சி கூட்டம் நடைபெறுவது போன்றே காணப்படுகின்றது. இதில் எதிர்கட்சிக்கான பங்கு இல்லாத நிலை உருவாகியுள்ளது எனத் தெரிவித்தார்.

Related posts: