வடக்கில் கடற்றொழில் அபிவிருத்தித் திட்டம்!

வட மாகாணத்தில் பேண்தகு கடற்றொழில் அபிவிருத்தி திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
இலங்கை கரையோரத்தில் சுமார் மூன்றில் இரண்டு பகுதி வடக்கு மற்றும் கிழக்கு பிரதேசத்திற்கு உட்பட்டதாக அமைந்துள்ளது. இங்கு வாழ்வாதார அபிவிருத்திக்கு பயன்படுத்தக்கூடிய முக்கிய தொழிற்துறையாக கடற்றொழில் தொழிற்துறை அடையாளம் காணப்பட்டுள்ளது.
இந்நிலையில் குறித்த பிரதேசத்தில் கடற்றொழில் தொழிற்துறையை மேம்படுத்துவதற்கு தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதற்காக 158 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி உதவியை வழங்குவதற்கு ஆசிய அபிவிருத்தி வங்கி உடன்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பருத்தித்துறை மற்றும் பேசாலை ஆகிய இடங்களில் 2 கடற்றொழில் துறைமுகங்களும், யாழ்ப்பாணம் மண்டைதீவில் நங்கூரம் இடுவதற்கான வசதிகளை அமைப்பதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.
அத்துடன் யாழ்ப்பாணம், மன்னார், முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களிலும் கடற்றொழில் இறங்கு துறைகள் மேம்படுத்தப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Related posts:
|
|