வடக்கின் போர் எதிர்வரும் 7 ஆம் திகதி ஆரம்பம்!

‘வடக்கின் போர்’ என வர்ணிக்கப்படும் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்கும் யாழ்ப்பாணம் சென். ஜோன்ஸ் கல்லூரிக்கும் இடையிலான நூற்றாண்டு கால கிரிக்கெட் போட்டி எதிர்வரும் 7ஆம் திகதி வியாழக்கிழமை ஆரம்பமாகின்றது.
வடக்கில் மிகவும் பிரபல்யமான போட்டியாக கருதப்படும் இந்த போட்டி எதிர்வரும் 7 ஆம் திகதிமுதல் 8, 9 ஆகிய மூன்று தினங்கள் நடைபெறவுள்ளது.
இரு பாடசாலைகளுக்கும் இடையில் 113 ஆவது போட்டியாக மொபிட்டல் நிறுவனத்தின் அனுசரணையுடன் இது யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மைதானத்தில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:
மைலோ கிண்ணத்தை வென்றது இசிப்பத்தான கல்லூரி!
இலங்கை - நியூசிலாந்து டி20 போட்டிகளில் மாற்றம்..!
ஆர்ஜன்டினா அணி முதல் வெற்றியை பதிவு செய்தது - பிரான்ஸ் இரண்டாம் சுற்றுக்கு தகுதி!
|
|