யுஎஸ்எய்ட் நிறுவன நிர்வாகி சமந்தா பவர் – ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இடையே இன்று விசேட கலந்துரையாடல்!

யுஎஸ்எய்ட் நிறுவன நிர்வாகி சமந்தா பவர், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் சந்திப்பில் ஈடுபட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இலங்கைக்கு நேற்று வருகைத்தந்த பவர், விவசாயத்துக்கு உதவியளிக்கும் வகையில் 40 மில்லியன் அமரிக்க டொலர்களுக்கான நிதியுதவியை அறிவித்தார்.
அத்துடன் இலங்கைக்கு அமரிக்கா இந்த தருணத்தில் உதவி செய்யும் என்ற நிலையில், எதிர்காலத்தில் இலங்கையின் நெருக்கடி தொடர்பில் தமது கவலையையும் வெளிப்படுத்தினார்.
அதேநேரம் இந்தியாவுடன் இலங்கை தொடர்பில் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
ஜனாதிபதி ரணிலை சந்தித்த பின்னர் அவர், பல்வேறு மட்டத்தினருடனும் சந்திப்புக்களில் ஈடுபடவுள்ளமை குறிப்பிடத்தக்கது..
000
Related posts:
நுண்கடன் திட்டத்தால் வடக்கு, கிழக்கில் 78 பேர் உயிரிழப்பு!
விடைத்தாள்கள் திருத்தும் பணிகள் தாமதமடைவதால் கல்வி உரிமை மீறப்படுகின்றது - மாணவர்கள் குற்றச்சாட்டு!
09 அத்தியாவசிய பொருட்களின் விலைகளைக் குறைக்கத் தீர்மானம்!
|
|