யாழ் மாவட்டத்தில் பிறப்பு பதிவற்ற சிறுவர்களின் எண்ணிக்கை 15 ஆக அதிகரிப்பு!

யாழ் மாவட்டத்தில் 15 சிறுவர்கள் பிறப்பு பதிவற்ற நிலையில் காணப்படுகின்றனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நேற்றையதினம் இடம்பெற்ற சிறுவர் அபிவிருத்தி குழுக் கூட்டத்திலேயே இவ்விடயம் குறித்துத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாண மாவட்ட செயலாளர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில்” கடந்த காலாண்டில் பிறப்பு பதிவற்ற சிறுவர்களின் எண்ணிக்கை 104 ஆக காணப்பட்டபோதும் பல்வேறு பட்ட முயற்சிகளுக்கு பின்னர் 89 பேருக்கு பிறப்பு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக யாழ் மாவட்டத்தில் பிறப்பு பதிவற்ற சிறுவர்களின் எண்ணிக்கை 15 ஆகக் காணப்படுவதாகவும் ,நீதிமன்ற வழக்குகள் மற்றும் தந்தை தாய் இடையே காணப்படும் முரண்பாடு காரணமாகவே இப் பிறப்பு தொடர்பான பதிவை மேற்கொள்வதில் சிக்கல் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
|
|