யாழ் – பொலிஸ் நிலையத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் மரணம்!

யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இன்று (28.07.2021) காலையில், அவரின் தங்குமிடத்திலுள்ள படுக்கையிலேயே அவர் சடலமாக மீட்கப்பட்டார்.
அநுராதபுரத்தை சேர்ந்த 45 வயதுடைய சார்ஜண்ட் ஜயசேகர (45) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
நேற்றிரவு கடமையை முடித்து விட்டு யாழ், பண்ணையிலுள்ள பொலிஸ் தங்குமிடத்திற்கு சென்று உறக்கத்திற்கு சென்றார்.
பின்னர், இன்று காலையில் கடமைக்கு செல்வதற்காக காலை 5.30 மணியளவில் சக பொலிஸ் உத்தியோகத்தர்களால் தட்டியெழுப்ப முயன்ற போது, அவர் உயிரிழந்திருந்தது தெரியவந்தது.
இந்நிலையில், சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
மருத்துவக் கழிவுகளை ஏற்றிச் செல்ல பழைய வாகனங்களைப் பயன்படுத்தவும் - வடக்குமாகாண சுகாதார சேவைகள் பணிப...
முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுத்தரப்படும் – ஈ.பி.டி.பியி...
மலசல கூடம் அமைப்பதற்காக ஒதுக்கப்பட்டிருந்த இடத்தில் திடீரென முழைத்த கடைகள்: பின்னணியில் யாழ். மாநகரி...
|
|
வாகன இலக்க தகடுகளில் மாகாணங்களைக் குறிக்கும் ஆங்கில எழுத்துக்களை நீக்குவதற்கான அமைச்சரவை அனுமதி !
புதிய வைரஸ் திரிபு தொடர்பான பரிசோதனை அறிக்கை இன்னும் இரண்டு வாரங்களில் வெளியிடப்படும் - ஸ்ரீ ஜயவர்தன...
பிரதமர் ரணில் பணிப்புரை - எதிர்வரும் ஜூன் மாதம்முதல் பிரதமர் அலுவலகத்தின் செலவீனங்களை50 சதவீதமாக குற...