“யாழ் நகரை பசுமை ஆக்குவோம்” வேலைத்திட்ட நாளை ஆரம்பம் – வடக்கு மாகாண ஆளுநர் அலுவலுகம் தெரிவிப்பு!

“யாழ் நகரை பசுமை ஆக்குவோம்” வேலைத்திட்ட ஆரம்பநிகழ்வு நாளை (05.06.2018) நடைபெறவுள்ளதாக வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் ஆளுநர் அலுவலகம் ஊடகங்களுக்கு அனுப்பியுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது –
வடமாகாணசபை, யாழ் மாநகரசபை, ஆளுநர் செயலகம் இணைந்து நடாத்தும் “யாழ் நகரை பசுமை ஆக்குவோம்” வேலைத்திட்ட ஆரம்பநிகழ்வு நாளை (05.06.2018) நடைபெறவுள்ளதாக வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
குறித்த நிகழ்வு யாழ் பண்ணை சுற்றுவட்ட முன்றலில் நாளை காலை 8 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது .
இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்கள் மாகாணசபை உறுப்பினர்கள் உள்ளுராட்சி சபை உறுப்பினர்கள் திணைக்கள அதிகாரிகள் அரசியல் பிரமுகர்கள் பொதுமக்கள் பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொள்ள உள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
புதிய நடைமுறையில் பிணை முறிப்பத்திர விற்பனை - மத்திய வங்கி!
விசேட அறிக்கையை வெளியிடவுள்ளார் நீதி அமைச்சர்!
எகிப்து தாக்குதலுக்கு இலங்கை அரசாங்கம் கண்டனம்!
|
|