யாழ். குடாநாட்டில் மரக்கறிகளின் விலைகள் அதிகரிப்பு!

யாழ். குடாநாட்டில் மரக்கறிகளின் விலைகள் நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்வதால் பொதுமக்கள் செய்வதறியாது திண்டாடி வருகின்றனர்.
யாழ். குடாநாட்டின் பிரதான சந்தையான திருநெல்வேலி பொதுச் சந்தை, மருதனார்மடம் பொதுச் சந்தை, சுன்னாகம் மத்திய சந்தை ஆகிய சந்தைகளில் தற்போது ஒரு கிலோ கத்தரி-400 ரூபாவாகவும், ஒரு கிலோ கரட்-260 ரூபாவாகவும், ஒரு கிலோ கோவா-160 ரூபாவாகவும் என அனைத்து மரக்கறி வகைகளும் நூறு ரூபாவுக்கு மேல் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
அண்மையில் தொடர்ச்சியாகப் பெய்த அடை மழை காரணமாக யாழ். குடாநாட்டின் பல்வேறு பகுதிகளிலும் மேற்கொள்ளப்பட்டு வந்த சிறுபோக விவசாயச் செய்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்தது. இதன் எதிரொலியாகவே மரக்கறிகளின் விலைகள் அதிகரித்துள்ளன.


Related posts:
தேசிய கல்வியியற் கல்லூரிக்கு உள்வாங்கும் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு!
புதிய ஆட்சியில் உங்களது ஆதங்கங்களுக்கு தீர்வு கிட்டும் - பூவக்கரை மக்கள் மத்தியில் ஐயாத்துரை ஸ்ரீரங...
நாடு பூராகவும் ஒரே நேரத்தில் பாடசாலைகளை திறப்பதற்கான சாத்தியம் கிடையாது - கல்வி அமைச்சர் தெரிவிப்பு!
|
|