யாழ்.குடாநாட்டின் சில பிரதேசங்களில் நாளை மின்தடை !

மின்விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காக யாழ். குடாநாட்டின் சில பிரதேசங்களில் நாளை வெள்ளிக்கிழமை(19) காலை-08.30 மணி முதல் மாலை-05 மணி வரை மின்சாரம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
இதன்படி, வெற்றிலைக்கேணி, கட்டைக்காடு, கேவில், வெற்றிலைக்கேணி இராணுவ முகாம், கட்டைக்காடு இராணுவ முகாம், உடுத்துறை, கொடுக்குழாய், ஆழியவளை ஆகிய பிரதேசங்களில் மின்சாரம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சாரசபை மேலும் தெரிவித்துள்ளது.
Related posts:
மின்வெட்டுக்கு அரசு தயாராகிறது
குழியில் விழுந்து உயிரிழந்த குழந்தை!
"சீன உரத்தில் தான் பிரச்சனை - மாறாக சீனாவுடன் இல்லை" – அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே சுட...
|
|