யாழ்.குடாநாட்டின் சில பிரதேசங்களில் நாளை மின்தடை!

மின்விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காக யாழ்.குடாநாட்டின் சில பிரதேசங்களில் நாளை சனிக்கிழமை(18) காலை -08.30 மணி முதல் பிற்பகல்-06 மணி வரை மின்விநியோகம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
இதன்படி, பொலிகண்டி, ஆலடி, நெடியகாடு, வல்வெட்டித்துறை, வெள்ள றோட், உடுப்பிட்டி மகளிர் கல்லூரி, உடுப்பிட்டி நாவலடி, வன்னிச்சியம்மன் கோவிலடி, கம்பர்மலை, பாரதி தாசன் வீதி, பழைய பொலிஸ் நிலையம், உடுப்பிட்டி வாசிகசாலை, உடுப்பிட்டி வி.சி, நாச்சிமார் கோவிலடி, இலந்தைக்காடு, கொற்றாவத்தை, பொக்கணைச் சந்தி, கெருடாவில், தொண்டைமானாறு, மயிலியதனை, சிதம்பரா வடக்கு வீதி ஆகியவிடங்களில் மின்விநியோகம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
Related posts:
உலகின் பொருளாதார வளர்ச்சி வேகம் 3.6 சதவீதமாக அதிகரிக்கும் - பொருளாதார கூட்டுறவு மற்றும் அபிவிருத்தி ...
யாழ் மாவட்டத்தில் வறட்சியினால் அதிகளவு மக்கள் பாதிப்பு!
வழமைக்கு திரும்பியது புகையிரத சேவைகள்!
|
|