யாழ்ப்பாணம் நூலகத்துக்கு 1.10 லட்சம் நூல்கள்: அமைச்சர் செங்கோட்டையன் தகவல்!

யாழ்ப்பாணம் நூலகத்துக்கு தமிழக அரசு சார்பில் 1.10 லட்சம் நூல்கள் வரும் செப்டம்பர் மாதம் வழங்கப்பட உள்ளதாக பாடசாலைக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் தெரிவித்தார்.
தமிழ்நாடு நூல் வெளியீடு, விற்பனை மேம்பாட்டுக் குழுமம் சார்பில் 4 -ஆவது சென்னை புத்தகத் திருவிழா ராயப்பேட்டை ஒய். எம். சி.ஏ. மைதானத்தில் கடந்த 17 – ஆம் தேதி தொடங்கியது. இதன் நிறைவு விழாவில், சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேசியது –
இலங்கையில் நடைபெற்ற கலவரத்தின்போது, யாழ்ப்பாணம் நூலகம் எரிக்கப்பட்டது. அதில், பல லட்சம் அரிய நூல்கள் எரிந்து சாம்பலாகின. அந்த நூலகத்துக்கு தமிழக அரசு சார்பில் 1.10 லட்சம் நூல்கள் வழங்க உள்ளோம். யாழ்ப்பாணத்துக்கு செப்டம்பர் 15-ஆம் தேதி செல்லும்போது இந்த நூல்கள் அனைத்தும் நூலக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படும் என்றார்.
Related posts:
பான் கீ மூன் எதிர்வரும் 2ஆம் திகதி இலங்கைக்கு விஜயம்!
தொடருந்து சேவைகள் முழுமையாக பாதிப்பு!
யாழ்.குருநகர் பகுதியில் கடலாமை இறைச்சியுடன் நால்வர் விசேட அதிரடிப் படையினரால் கைது !
|
|