யாழ்ப்பாணத்தில் நீண்ட காலத்தின் பின் மலேரியா நோயாளி – முன்னெச்சரிக்கையாக இருக்குமாறு யாழ்ப்பாணப் பிராந்திய மலேரியாத் தடுப்பு பிரிவு வலியுறுத்து!
Friday, December 17th, 2021யாழ்ப்பாணத்தில் நீண்ட காலத்துக்குப் பின்னர் மலேரியா நோயாளி ஒருவர் இனங்காணப்பட்டுள்ளார்.
காய்ச்சல் காரணமாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நேற்று முன்தினம் புதன்கிழமை இரவு சேர்க்கப்பட்ட மல்லாகத்தைச் சேர்ந்த 27 வயது டைய நபர் ஒருவருக்கே மலேரியா தொற்று ஏற்பட் டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
கடந்த வாரம் தென்னாபிரிக்காவில் இருந்து இலங்கைக்கு வந்தவரே மலேரியா தொற்றுக்கு ஆளாகியிருக்கிறார்.
கடுமையான காய்ச்சல் மற்றும் மலேரியா அறிகுறிகளுடன் நேற்றுமுன்தினம் இரவு 8 மணியளவில் குறித்த நபர் சேர்க்கப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இருந்து யாழ்ப்பாணப் பிராந்திய மலேரியா தடுப்பு வைத்திய அதிகாரியின் கவனத்துக்கு; கொண்டு வரப் பட்டதை அடுத்து அவருக்கு மலேரியா தொற்றுக்கான பரிசோத னைகள் மேற்கொள்ளப்பட்டு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டது.
தொற்றுக்குள்ளான நபர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்கு உட்படுத்தப் பட்டுள்ளார்.
மலேரியா அற்ற நாடுகளின் பட்டியலில் இலங்கை இடம்பெற்றுள்ளபோதிலும், வெளிநாடுகளில் இருந்து வருபவர்களால் மலேரியா பரவல் அச்சம் ஏற்பட்டுள்ளது என்றும், மலேரியா எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கும் நாடுகளுக்குச் செல்பவர்கள் மலேரியா முன்னெச்சரிக்கை மருத்துவ வழிகாட்டுதல்களை தகுதி வாய்ந்த மருத்துவ அதிகாரிகளிடம் பெற்றுச் செல்லுமாறும் யாழ்ப்பாணப் பிராந்திய மலேரியாத் தடுப்பு மருத்துவ அதிகாரி மருத்துவர் ஜெயக்குமாரன் தெரிவித் துள்ளார். குறிப்பாக, அடுத்த மாதம் ஐயப்ப விரத பூர்த்திக்காக இந்தியாவுக்குச் செல்ல இருக்கும் பக்தர்கள் மலேரியா தடுப்புக்கான முன்னாயத்த சிகிச்சையைப் பெற்றுக் கொண்ட பின்னர் பயணத்தில் ஈடு படுமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
|
|