யாழ்ப்பாணத்தில் சீரற்ற காலநிலை – 216 குடும்பங்களைச் சேர்ந்த 758 பேர் பாதிப்பு – மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு அறிவிப்பு!

யாழ்ப்பாணத்தில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக 216 குடும்பங்களைச் சேர்ந்த 758 பேர் பாதிக்கப்பட்டுள்ளனரென மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவி பணிப்பாளர் சூரியராஜ் தெரிவித்துள்ளார்.
இதன்போது சூரியராஜ் மேலும் கூறியுள்ளதாவது – “நேற்றுமுன்தினம்முதல் பெய்த மழை மற்றும் அதிக காற்று காரணமாக 216 குடும்பங்களைச் சேர்ந்த 758 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் 5 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதுடன், காரைநகரில் இரண்டு குடும்பத்தை சேர்ந்த 8 பேர் தற்காலிகமாக வியாவில் பயிற்சி நிலையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்” என அவர் குறிப்பிட்டுள்ளனர்.
இதேவேளை காரைநகர் பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதியினை யாழ்.மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவிப் பணிப்பாளர் மற்றும் யாழ்.மாவட்ட அனர்த்த முகாமை பிரிவினர் நேரடி கள விஜயத்தினை மேற்கொண்டு, சேத விபரங்கள் தொடர்பில் கள ஆய்வில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
|
|