யாழ்ப்பாணத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அரச உத்தியோகஸ்த்தர் உட்பட 16 பேருக்கு தொற்று உறுதி!

யாழ்ப்பாணத்தில் 16 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருக்கும் நிலையில் தொற்றுக்குள்ளானவர்கள் விபரங்களை மாகாண சுகாதார பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் வெளியிட்டுள்ளார்.
இதன்படி யாழ்.சிறைச்சாலையில் 5 பேருக்கும், சாவகச்சேரி பகுதியில் 3 பேருக்கும், கோப்பாய் பகுதியில் ஒருவருக்கும், யாழ்.போதனா வைத்தியசாலையில் 3 பேருக்கும், யாழ்.மாநகர சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 4 பேருக்கும் தொற்று உறுதியாகியுள்ளது.
இதில் சாவகச்சோி – கைதடியில் தொற்றுக்குள்ளான ஒருவர் அரச திணைக்களம் ஒன்றில் அபிவிருத்தி உத்தியோகஸ்த்தராக கடமையாற்றுபவர் என பணிப்பாளர் கூறியுள்ளார்.
மேலும் யாழ்.மாநகரில் தொற்றுக்குள்ளான 4 பேரும் தொற்றாளர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள். எனவும் பணிப்பாளர் கூறியுள்ளார்.
Related posts:
காணிகளை விடுவிக்க ஆணைக்குழு அமைக்கப்பட மாட்டாது – ஜனாதிபதி!
தனக்கு பாதுகாப்பு வழங்கப்படுமாயின் அனைத்து உண்மைகளையும் வெளியிடுவேன் மாகந்துரே மதூஷ் CID இடம் வாக்கு...
நாட்டில் காணப்படும் நடைமுறை பிரச்சினைகளுக்கு இரு மாதத்திற்குள் தீர்வு – அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெர...
|
|