மேல் மாகாண பாடசாலைகளின் அனைத்து வகுப்புகளையும் எதிர்வரும் 29 முதல் மீள திறக்க அனுமதி!

Wednesday, March 24th, 2021

மேல் மாகாண பாடசாலைகளின் அனைத்து வகுப்புகளையும் மீண்டும் ஆரம்பிக்க சுகாதாரப் பணிப்பாளர் நாயகம் அனுமதி வழங்கியுள்ளார்.

அதற்கமைய, எதிர்வரும் 29 ஆம் திகதிமுதல் முதலாம் தவணையின் இரண்டாம் கட்டமாக மேல் மாகாண பாடசாலைகளின் அனைத்து வகுப்புகளையும் மீள திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேல் மாகாண பாடசாலைகளின் 5, 11 மற்றும் 13 தரங்களின் கல்வி நடவடிக்கை  கடந்த 15 ஆம் திகதி முதல் ஆரம்பமாகின.

எனினும், மேல் மாகாணத்தின் ஏனைய தரங்களை எதிர்வரும் ஏப்ரல் 19 ஆம்திகதி ஆரம்பிப்பதென முன்னதாக தீர்மானிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts:


அடுத்த மே தினத்திற்குள் தண்டிக்கப் படுவார்கள்  ராஜாபக்ச  குடும்பத்தினர்  - ராஜித சேனரத்னா  சீற்றம்!
கொரோனா தடுப்பூசி வழங்குவதில் ஆசிரியர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் – கல்வி அமைச்சர் கோரிக்க...
பொது இடங்களில் முகக்கவசம் அணிதல் கட்டாயமில்லை என்ற தீர்மானத்திற்கு விசேட வைத்தியர்கள் சங்கம் கண்டனம்...