மேல் மாகாணத்தில் பொலிஸார் அதிரடி: ஒரே இரவில் 1262 பேர் கைது!

Friday, October 14th, 2016

 

மேல் மாகாணத்தில் பொலிஸார்  நேற்றிரவு (13) மேற்கொண்ட அதிரடி சுற்றிவளைப்பின்போது பல்வேறு குற்றங்கள் மற்றும் சந்தேகத்தின் பேரில் 1262 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

நேற்றிரவு 11 மணிமுதல் அதிகாலை 1 மணிவரை குறித்த சுற்றிவளைப்பினை பொலிஸார் மேற்கொண்டுள்ளதாக சிரேஸ்ட பிரதிபொலிஸ் மா அதிபர் நந்தன முனசிங்க தெரிவித்தார். இவர்களில், பதிவு செய்யப்பட்டுள்ள குற்றவாளிகள் 46 பேர் அடங்குவதாக சிரேஸ்ட பிரதிபொலிஸ் மா அதிபர் நந்தன முனசிங்க தெரிவித்தார்.

சந்தேகத்தின் பேரில் 540 பேர், பிடியாணை பிறப்பிக்கப்பட்டவர்கள் 177 பேர், பொலிஸாரால் தேடப்பட்டு வந்த சந்தேக நபர்கள் 17 பேர் மற்றும் போதைப்பொருள் குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய 23 பேர் இந்த சுற்றிவளைப்பின் போது கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை மதுபோதையில் வாகனம் செலுத்திய 103 பேர், விதிமுறைகளை மீறி வாகனம் செலுத்தியவர்கள் 323 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், சிறைச்சாலையிலிருந்து தப்பிச்சென்ற இருவர் மற்றும் முப்படையிலிருந்து தப்பிச்சென்ற நால்வரும் இதன் போது கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில்  குறித்த சுற்றிவளைப்புகளில் மேல் மாகாணத்தச் சேர்ந்த 3072 பொலிஸ் உத்தியோகத்தர்களின் ஈடுப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

2138341166cfb31cffe0bf3dfaafce16_L copy

Related posts: