மேலும் 50,000 ஸ்புட்னிக் V தடுப்பூசிகள் இன்றிரவு இலங்கைக்கு – இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன!

ரஷ்யாவிடமிருந்து 50,000 ஸ்புட்னிக் V கொவிட் தடுப்பூசிகள் இலங்கைக்கு கிடைக்கப்பெறவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.
அத்துனட் இந்த தடுப்பூசிகள் இன்று (27) இரவு நாட்டை வந்தடையும் என அவர் மேலும் தெரிவித்தார்.
இலங்கையினால் மொத்தமாக முன்பதிவு செய்யப்பட்டுள்ள ஒரு இலட்சத்து 85 ஆயிரம் ஸ்புட்னிக் V தடுப்பூசிகளின் இரண்டாவது தொகுதியே இவ்வாறு கிடைக்கப்பெறவுள்ளன.
இதற்கு முன்னதாக கடந்த 3 ஆம் திகதி முதல் தொகுதியாக 15,ஆயிரம் ஸ்புட்னிக் V தடுப்பூசிகள் ரஷ்யாவிலிருந்து நாட்டை வந்தடைந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
பாவனைக்கு பொருத்தமற்ற உணவுப்பொருட்கள் தொடர்பில் முறையிடவும்!
கொரோனா வைரஸ்: உலக சுகாதார மையம் விடுத்துள்ள அதி முக்கிய அறிவிப்பு!
கொரோனா தொற்று அறிகுறிகள் தென்பட்டால் செல்லப் பிராணிகளுடன் தொடர்பு கொள்வதைத் தவிருங்கள் - கால்நடை உ...
|
|