மேலும் 1595 முகாமைத்துவ உதவியாளர்களை உள்வாங்க அமைச்சு அனுமதி!

முகாமைத்துவ உதவியாளர் சேவைக்கு மேலும் 1595 பேர் இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாகவும் இதற்கு நிதி அமைச்சு அங்கீகாரம் அளித்திருப்பதாகவும் அரசாங்க நிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சு தெரிவித்துள்ளது.
கொழும்பு மாவட்டத்தில் அரச நிறுவனங்களில் நிலவும் முகாமைத்துவ உதவியாளர் சேவையின் வெற்றிடத்தை நிரப்புவதற்கு 1595 பேரை சேவையில் இணைத்துக் கொள்ள அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
2014ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடத்தப்பட்ட முகாமைத்துவ உதவியாளர் சேவைக்கான போட்டிப் பரீட்சையில் கூடுதலான புள்ளிகளை பெற்றவர்கள் இந்த சேவையில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர். தெரிவு செய்யப்பட்டவர்களின் பெயர்விபரங்கள் அரசாங்க நிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சின் இணையத்தளத்தில் இடம்பெற்றுள்ளன.
Related posts:
அடையாள அட்டை கிடைக்காத மாணவர்கள் தொடர்பு கொள்ள இலக்கம் !
திடீரென மரக்கறிகளின் விலைகள் அதிகரிப்பு!
நாட்டில் சுழற்சி முறையில் மின்தடை அமுலாக்கம் – இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவிப்பு!
|
|