மூன்று தனியார் மருத்துவ கல்லூரிகளை ஆரம்பிப்பதற்கு அனுமதி – சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல அறிவிப்பு!

மூன்று தனியார் மருத்துவ கல்லூரிகளை ஆரம்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
கண்டியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் இது தொடர்பில் கருத்து வெளியிட்டார்.
மருத்துவம் படிக்க தகுதியுள்ள பல பிள்ளைகள் உள்ளனர். நமது பல்கலைக்கழகத்தின் மருத்துவப் பட்டமும் உலக அளவில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
அந்த அங்கீகாரத்தை மீறாமல், அந்தத் தரத்தில் தனியாரோ, அரசோ, பல்கலைக் கழகமோ உருவாக்கப்பட்டால், அதை உலகுக்குக் கொடுக்க முடிந்தால் அதற்கு இணையாகச் செல்லக்கூடிய திட்டத்தை உருவாக்க வேண்டும்.
சுகாதார அமைச்சர் என்ற வகையில் நான் மூன்று தனியார் பல்கலைக்கழகங்களை நிறுவ அனுமதி வழங்கியுள்ளேன். தற்போது அவை செயல்படுத்தப்பட்டு வருகின்றன என்றும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
எதிர்வரும் ஜூன் மாதத்திற்குள் மாகாண சபை தேர்தலை நடத்த அரசாங்கம் திட்டம்?
போருக்குப் பின்னரான முக்கிய பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதாக இலங்கை உறுதி - அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் த...
IMF உடனான வேலைத்திட்டத்தின் முதலாவது மீளாய்வை இலங்கை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது - ஜப்பானிய நிதிய...
|
|