மூச்சுத்திணல் – பறிபோன 3 மாத குழந்தையின் உயிர் – யாழ் இணுவிலில் சோகம்!

யாழ்ப்பாணத்தில் மூச்சுத்திணறல் காரணமாக மூன்றரை மாத குழந்தையொன்று உயிரிழந்துள்ளது.
யாழ்ப்பாணம் இணுவில் தெற்கைச் சேர்ந்த மூன்றரை மாத ஆண் குழந்தையொன்றே இவ்வாறு உயிரிழந்துள்ளது.
நேற்று (22) அதிகாலை தாய்ப்பால் குடித்த குழந்தை திடீரேன மூச்சடங்கி காணப்பட்டுள்ளது. இதனையடுத்து, குழந்தை உடனடியாக யாழ். போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் குழந்தை ஏற்கனவே உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை சுன்னாகம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Related posts:
அதிபர் இடமாற்றத்தில் முறைகேடு : கல்வி அமைச்சை குற்றம் சாட்டுகிறது இலங்கை ஆசிரியர் சங்கம்!
அதிபர்கள், ஆசிரியர்கள் சுகயீன விடுமுறைப் போராட்டத்திற்கு தயார்!
எதிர்வரும் செப்ம்பர் 15ஆம் திகதியன்று 37 வருட சேவைக்கு ஓய்வு கொடுப்பதாக மஹிந்த தேசப்பிரிய அறிவிப்பு!
|
|