முல்லைத்தீவில் ஆடைத்தொழிற்துறை பயிற்சி!

முல்லைத்தீவில் வறுமைக்கோட்டிற்கு உட்பட்ட மக்களின் வாழ்க்கை நிலையை மேம்படுத்தும் நோக்கில் நல்லிணக்க நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் ஆடைத் தொழிற்துறை பயிற்சி நிலையம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் முல்லைத்தீவு பிரதேசத்திற்கு பொறுப்பான கட்டளைத்தளபதி ஆகியோரின் வழிநடத்தலின் கீழ் பிரதேசத்தில் 150 இளைஞர் யுவதிகளுக்கு இந்த பயிற்சி தொடர்பிலான நேர்முகப்பரீட்சைகள் நடத்தப்பட்டன.
தெரிவுசெய்யப்பட்ட 35 பேருக்கு இங்கு பயிற்சிகள் வழங்கப்படவுள்ளன.இந்த பணிக்காக தனியார் ஆடைத்தொழிற்துறை நிறுவனம் ஒன்று முன்வந்துள்ளது. ஆடைத்தொழிற்துறையில் 300 பேருக்கு தொழில் வாய்ப்புக்கள் பெற்றுக் கொடுக்கப்படவுள்ளன
Related posts:
யாழ். மாவட்டத்தில் ஐந்து சமுர்த்தி வங்கிகளுக்கு விருது!
உள்ளூராட்சி மன்றங்கள் தொடர்பில் விசேட வேலைத்திட்டம் - வடக்கு ஆளுநரின் வழிகாட்டலில் இன்று ஆரம்பித்துவ...
ஆயுத உற்பத்திப் பிரிவு ஒன்றை அமைப்பது தொடர்பாக இலங்கை இந்தியாவுடன் பேச்சு - பாதுகாப்பு இராஜாங்க அமை...
|
|