முச்சக்கர வண்டியின் கட்டணத்தை உயர்த்துவதற்கு கோரிக்கை!

எரிபொருட்களின் விலைகள் மீண்டும் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், முச்சக்கர வண்டிக் கட்டணத்தை அதிகரிக்க வேண்டியுள்ளதாக அகில இலங்கை முச்சக்கர வண்டிச் சாரதிகள் மற்றும் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
தற்போதைய கட்டணத்தை அதிகரிக்க முடிவு செய்துள்ள தாகவும், இதற்கமைய ஒரு கிலோமீற்றருக்கு 10 ரூபாவாக அதிகரிக்க தீர்மானித்துள்ளதாகவும் சங்கத் தின் தலைவரான சுதில் ஜயருக் தெரிவித்துள்ளார்.
ஏறக்குறைய ஒரு தசாப்த காலமாக இதே கட்டணங்களைப் பேணியதாகவும், எரிபொருள் விலை அதிகரிப்பு தமக்கு மேலும் சுமையை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
நிவாரணம் வழங்குவது தொடர்பாக அரசாங்கம் எந்தக் கலந்துரையாடலையும் முன்னெடுக்கவில்லை அல்லது பரிசீலிப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என்பதால் கட்டணத்தை அதிகரிப்பதைத் தவிர வேறு வழியில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
குறைந்தபட்ச கட்டணத்தை ரூ.60 ஆகவும், இரண்டாவது கிலோமீற்றருக்கான கட்டணத்தை ரூ.50 ஆகவும் அதிகரிக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார். நுகர்வோருக்கும் சுமை ஏற்படும் என்பதால் கட்டணங்களை ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
டயர்கள், எண்ணெய் உள்ளிட்ட அனைத்து உபகரணங்களின் விலையும் அதிகரித்துள்ளன. எவ்வாறாயினும் அரசாங்கம் தலையிட்டு முச்சக்கர வண்டிக் கட்டண உயர்வை நிறுத்த முடியும் என அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|