மார்ச் 3 முதல் புழக்கத்திற்கு வருகிறது இரண்டு ரூபா புதிய நாணயம்!

இலங்கை மத்திய வங்கியின் 70ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு வெளியிடப்பட்ட புதிய 20 ரூபாய் நாணயம் நிதி அமைச்சரும் பிரதமருமான மஹிந்த ராஜபக்ஷவிடம் அலரி மாளிகையில் வைத்து வழங்கிவைக்கப்பட்டது.
மத்திய வங்கியின் ஆளுநர் பேராசிரியர் W.D.லக்ஷ்மனால் புதிய 20 ரூபாய் நாணயம் பிரதமரிடம் வழங்கப்பட்டது.
இப்புதிய 20 ரூபாய் நாணயம் ஏனைய பணத்தாள்கள் மற்றும் நாணயங்களுடன் கொடுப்பனவிற்காக 2021 மார்ச் 03 ஆம் திகதிமுதல் புழக்கத்திற்கு வரும் என்றுமு; தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்பதாக நேற்று முன்தினம் குறித்த நாணயம் மத்திய வங்கியின் ஆளுநர் பேராசிரியர் W.D.லக்ஷ்மனால் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்சவிடமும் சம்பிரதாய பூர்வமாக வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
ஜனாதிபதி தலைமையில் அவசரமாகக் கூடுகிறது ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு!
50 ஆண்டுகால இராஜதந்திர உறவுகளை நினைவுகூரும் வகையில் இலங்கை -சிங்கப்பூரில் கூட்டு முத்திரை வெளியீடு!
ஒவ்வொரு மாகாணங்களுக்குமான பொலிஸ் அதிகாரப் பகிர்வின் பின்விளைவுகள் பாரதூரமானது - அமைச்சர் அலி சப்ரி ச...
|
|