மாதம் 35 லட்சம் வாடகை செலுத்தும் வெளிநாட்டலுவல்கள் அமைச்சு!

இலங்கை வெளிநாட்டலுவல்கள்அமைச்சானது செலின்கோ நிறுவனத்தின் 3 மாடிக் கட்டிடத்துக்கு மாதாந்தம் 35 லட்சம் வாடகையை செலுத்தி வருவதாக குற்றஞ்சுமத்தப்பட்டுள்ளது.
கொழும்பு ஸ்ரீமத் பாரோன் ஜயதிலக மாவத்தையில் தற்போது வெளிநாட்டலுவல்கள்அமைச்சு இயங்கி வரும் அலுவலகத்தை குறித்த செலின்கோ நிறுவன கட்டிடத்திற்கு மாற்றவதற்காக இந்த கட்டிடம் பெறப்பட்டுள்ள போதும் கடந்த 4 மாதங்களாக இது பயன்படுத்தப்படாமல் வாடகை மாத்திரம் வழங்கப்பட்டு வருவதாகவும் இதன்மூலம் தேசிய பணமானது அழிக்கப்படுவதாகவும் தெரிவித்து ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு கடிதம்அனுப்பப்பட்;டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வருடம் மே மாதம் முதல் இந்த மாதம் வரை இந்தக் கட்டிடத்துக்கு 175 லட்சவாடகை பணம் வழங்கப்பட்டுள்ளதோடு, தற்போது வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு இயங்கி வரும் கட்டிடத்துக்கும் 4 லட்ச மாத வாடகை செலுத்தப்பட்டு வருவதாகசுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அதற்கமைய கடந்த மே மாதம்முதல் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சானது 39 இலட்சங்களை மாத வாடகையான இரண்டு கட்டிடங்களுக்கும் செலுத்தி வருவதாககுறிப்பிடப்பட்டுள்ளது.
Related posts:
|
|