மாதச் சம்பளத்தை கொவிட் நிதிக்கு வரவு வைக்கக் கோரி அமைச்சர் பந்துல குணவர்தன கடிதம்!

வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன இந்த ஓகஸ்ட் மாதத்திற்குரிய தனது சம்பளத்தை ‘இதுகாம’ கொவிட் நிதிக்கு வழங்க முடிவு செய்துள்ளார்.
இது குறித்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளதோடு, நாடாளுமன்ற செயலாளரிடம் தனது மாதச் சம்பளத்தை கொவிட் நிதிக்கு வரவு வைக்கக் கோரி கடிதத்தையும் வழங்கியுள்ளார்.
நாட்டின் கடுமையான நிதி நெருக்கடி காரணமாக அமைச்சர் இந்த முடிவை எடுத்துள்ளதாகவும், இந்த முன்மாதிரியான பணி ஜனாதிபதியால் பாராட்டப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி செயலர் 19 ஆம் திகதி அமைச்சருக்கு கடிதம் மூலம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
இனவாதத்தை தூண்டும் இணைதளங்களுக்கு பிரதமர் கடும் எச்சரிக்கை!
ஒவ்வொரு செயற்றிட்டங்களும் மக்கள் தேவைகளை அறிந்தே முன்னெடுக்கப்பட வேண்டும் – ஈ.பி.டி.பியின் யாழ் மாவட...
மோட்டார் வாகனங்கள் இறக்குமதிக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடு – இறக்குமதிக்கான உற்பத்தி வரி 49.1 பி...
|
|