மாணவர்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் கொடுக்கும் பல்கலைக்கழக மானிய ஆணைக்குழு!

பல்கலைக்கழக நிலைமைகள் தற்போது சுமூகமாக காணப்படுவதாகவும், வெளிமாவட்ட மாணவர்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும் எனவும் இந்நிலையில் மாணவர்கள் பயமின்றி கல்வி நடவடிக்கையினை தொடர முன்வர வேண்டும் எனவும் பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் மொஹான் டி சில்வா தெரிவித்துள்ளார்.
யாழ். பல்கலைக்கு விஜயம் செய்துள்ள பல்கலைக்கழக மானிய ஆணைக்குழு நேற்று துணைவேந்தர் மற்றும் பீடாதிபதிகளுடனான சந்திப்பொன்றை மேற்கொண்டதை தொடர்ந்து ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்..
அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,
கடந்த 16ஆம் திகதி யாழ். பல்கலைக்கழக விஞ்ஞான பீட மாணவர்களுக்கு மத்தியில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தை தொடர்ந்து மாணவர்களின் பாதுகாப்பு கருதி அனைத்து பீடங்களின் கல்வி செயற்பாடுகள் நிறுத்தப்பட்டிருந்த போதிலும் யாழ். பல்கலைக்கழக நிர்வாகத்தின் உடனடி நடவடிக்கை மூலம் பத்து பீடங்களில் மருத்துவம், சித்தமருத்துவம், விவசாயம், வவுனியா வளாகம் உள்ளடங்கலாக ஏழு பீடங்களின் கல்வி செயற்பாடுகள் முழுமையாக ஆரம்பமாகி இடம்பெறுகிறது.
இந்நிலையில் மீதமுள்ள பீடங்களும் விரைவில் கல்வி நடவடிக்கையினை ஆரம்பிப்பதற்கு பல்கலைக்கழக நிர்வாகம் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. தற்போது பல்கலைக்கழக நிலைமை சுமூகமாகவே காணப்படுகிறது. மாணவர்களின் பாதுகாப்பிற்கு எந்தவித கலங்கமும் இல்லை. எனவே நாட்டில் அனைத்து பகுதியில் இருந்து யாழ். பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் மாணவர்கள் அச்சமின்றி தமது கல்வி நடவடிக்கையினை தொடரமுடியும் அதற்கு மாணவர்கள் முன்வரவேண்டும் என தெரிவித்துள்ளார்.
Related posts:
|
|