மாகாணங்களுக்கென தனியான பிரதி சுகாதார சேவை பணிப்பாளர் நாயகங்கள் நியமனம் – சுகாதார அமைச்சு அறிவிப்பு!

நாட்டில் கொவிட் தடுப்பு நடவடிக்கைகளை மாகாண மட்டத்தில் முன்னெடுப்பதற்காக பிரதி சுகாதார சேவை பணிப்பாளர் நாயகங்கள் 9 பேர் நியமிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
கொரோனா தொற்றின் வேகம் நாட்டை அச்சசுறுத்தும் நிலையில் அனைத்து மாகாணங்களும் சென்று கொவிட் தடுப்பு நடவடிக்கைகளை கண்காணித்து தேவையான வசதிகளை வழங்குவதற்காக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சியினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதுவரையில் நாடளாவிய ரீதியில் 105 கொவிட் தடுப்பு நிலையங்களில் 19 ஆயிரத்திற்கும் அதிகமான கட்டில்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
குறைபாடுகளைக் கொண்ட விமான நிலையங்களில் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு 10ஆவது இடம்!
ஊரடங்கு சட்டம் மீண்டும் அமுல்படுத்துவது குறித்த அடுத்த அறிவிப்பு : ஜனாதிபதி ஊடக பிரிவு!
விளையாட்டுத்துறை சட்டத்தை மறுசீரமைக்க ஆறுமாத காலப்பகுதிகள் புதிய சட்டம் – அமைச்சர் நாமல் ஆராய்வு!
|
|