மருந்துகளின் விலை குறைப்பினால் அரசுக்கு 6 பில்லியன் ரூபா இலாபாம்!

நாட்டில் அத்தியாவசிய ஔடதங்கள் 48 இன் விலை குறைப்பின் காரணமாக சுமார் 6 பில்லியன் ரூபா வர்த்தக இலாபத்தை ஈட்ட முடிந்துள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
நாட்டிற்கு தேவையான ஔடதங்களை உற்பத்தி செய்யும் ஹொரண பிரதேசத்தில் அமைந்துள்ள தொழிற்சாலைகள் சிலவற்றுக்கு இன்று(12) விஜயமொன்றை மேற்கொண்டிருந்த அமைச்சர் இதனை தெரிவித்திருந்தார்.
மேலும் , 2019ஆம் ஆண்டளவில் இந்நாட்டிற்கு தேவையான அனைத்து ஔடதங்களையும் இந்நாட்டிலேயே உற்பத்தி செய்து கொள்ளுதல் தமது அமைச்சின் நோக்கம் என அமைச்சர் மேலும் தெரிவித்திருந்தார்.
Related posts:
80 மில்லியன் ரூபா வருமானம் ஈட்டியது இ.போ.சபை!
முடிவெட்டுவதில் மாணவர்களுக்கு புதிய கட்டுப்பாடு - மாகாண கல்வி அமைச்சு !
129 இலங்கையர்களுக்கு எதிராக இன்டர்போல் மூலம் சிவப்பு எச்சரிக்கை - பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன ...
|
|