மருந்துகளின் விலைகளைக் குறைக்க சுகாதார அமைச்சு நடவடிக்கை!

புற்று நோய் நோயாளர்களுக்கு பெற்றுக்கொடுக்கப்படும் அதிக விலையுடைய மருந்துகளின் விலைகளை எதிர்வரும் ஜூலை மாதம் தொடக்கம் குறைக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
இதன் முதற்கட்ட நடவடிக்கையின் கீழ் 48 வகையான மருந்துகளின் விலைகளை குறைக்க சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்திருந்தது.
அதன்படி, இரண்டாம் கட்ட நடவடிக்கையாக அதிக விலையுடைய மருந்துகளின் விலைகளை குறைக்க சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.
மருந்துகளின் விலை குறைக்கப்பட்ட பின்னர், தனியார் மருத்துவமனைகளில் விலை திருத்தம் செய்ய நடவடிக்கை எடுக்கவுள்ளதாக சுகாதார அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
Related posts:
துமிந்த சில்வாவுக்கு மரண தண்டனை - கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பு!
அரசாங்க ஊழியர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் வீட்டுத்திட்டம் - பிரதமர் மஹிந்தராஜபக்ச நடவடிக்கை!
தபாலகங்கள் மூலம் இலத்திரனியல் கழிவுகளை சேகரிக்க தீர்மானம் - மத்திய சுற்றாடல் அதிகார சபையின் தலைவர் த...
|
|