மரம் வெட்டும் இயந்திர கருவிகளின் பதிவு 20 ஆம் திகதி ஆரம்பம்!

மரங்களை வெட்டும் இயந்திர கருவிகளை பதிவு செய்யும் நடவடிக்கை இம் மாதம் 20 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
அரச, தனியார் நிறுவனங்கள் மற்றும் தனியார் பாவனைக்கு பயன்படுத்தும் சகல இயந்திரங்களும் அருகிலுள்ள பொலிஸ் நிலையங்களில் சமர்ப்பிக்கப்பட்டு, பதிவு அனுமதிப்பத்திரம் ஒன்றை கைவசம் வைத்திருக்க வேண்டும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மரங்கள் வெட்டும் இயந்திர கருவிகளை பதிவு செய்தலின் இறுதி தினம் எதிர்வரும் 28 ஆம் திகதி என பாதுகாப்பு அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டு குறிப்பிட்டுள்ளது.
Related posts:
அனைத்து பல்கலைக்கழகங்களும் இன்று ஆரம்பம் - வழிமுறைகள் தொடர்பில் துணைவேந்தர்களுக்கு அறிவித்தப்பட்டுள்...
ஓவியங்களை வரைந்த, தரிசு நிலங்களில் பயிர்ச்செய்த இளைஞர், யுவதிகளை மீண்டும் முன்வருமாறு ஜனாதிபதி பகிரங...
முதலீட்டை கவரும் வகையில் இலங்கைத் தூதுவர்கள் புதிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் - பிரதமர் தினேஷ் கு...
|
|