மரத்தூளைப் பயன்படுத்தி மரப்பலகை தயாரிக்க திட்டம் – நிதி இராஜாங்க அமைச்சர்!

மரத்தூளைப் பயன்படுத்தி மரப்பலகைகள் தயாரிக்கும் முறை தொடர்பாக அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.
2015 தொடக்கம் 2019 ஆம் ஆண்டு வரை மரப்பலகை இறக்குமதி செய்வதற்காக ரூபா 41,576 மில்லியன் செலவாகியுள்ளதாக இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மேலும் 59 நாடுகளிலிருந்து இலங்கைக்கு மரப் பலகைகளை இறக்குமதி செய்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்நிலையில் செலவுகளை கட்டப்படுத்தி உள்ளூரில் இத்தொழில் துறையை ஊக்குவிக்கும் முகமாக இலங்கையில் மரத்தூளைப் பயன்படுத்தி மரப்பலகைகள் தயாரிப்பதற்கு அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
பாவனைக்கு உதவாத றம்புட்டான் பழங்கள் விற்பனை செய்வோர் மீது சட்ட நடவடிக்கை!
பாடசாலை மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்கான தொலைக்காட்சி அலைவரிசையை ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை - புதிய...
நெருக்கடி நிலைமைகளுக்கு மத்தியில் கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை நாளை ஆரம்பம் - வீதியை மறித்து...
|
|