மரக்கறிகளின் விலை வீழ்ச்சியால் செய்கையாளர்கள் பெரும் பாதிப்பு!

Thursday, March 1st, 2018

யாழ்ப்பாணக் குடாநாட்டில் மரக்கறி விலையில் திடீர் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதால் செய்கையாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் குறிப்பாக கத்தரி,தக்காளி ,கரட் ,கோவா பூசணி,உருளைக்கிழங்கு போன்றவற்றின் விலை திடீரென சரிந்துள்ளது மரக்கறிகள் யாவும் விலை அறுபது ரூபாவிற்கு உட்பட்ட விலையிலேயே விற்கப்படுகின்றன.

அதனைவிடவும்      பச்சை மிளகாய் கிலோ ஜம்பது ரூபாவாகவும் சின்ன வெங்காயம் கிலோ 120 ரூபாவுக்கும் மேல் விற்கப்படுகின்றன. திருநெல்வேலி, சுன்னாகம் ,சங்கானை, சாவகச்சேரி, கொடிகாமம், சந்தைகளுக்கு தாராளமாக மரக்கறி வகைகள் வந்து சேர்கின்றன.

எனினும் போதிய சந்தை வாய்ப்பின்றி காணப்படுவதால் செய்கையாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது மாசி மாதம் ஆகையால் சுபகாரியங்கள்,பெருந் திருவிழாக்கள் என்பவற்றுக்கு உகந்த நாட்கள் இன்மையால் மரக்கறி பாவனை குறைந்துள்ளது எனவும் சந்தை வாய்ப்புக்கள் குறைந்துள்ளன என்று தெரிவிக்கப்பட்டது. பங்குனி மாதம் பிறந்தால் மரக்கறி வகைகளின் விலை உயரும் பங்குனித் திங்கள் மற்றும் சுப வைபவங்கள் ஆலயத் திருவிழாக்கள் ஆரம்பிக்கும் மாதம் ஆகையால் மரக்கறிப் பாவனையும் அதிகரிக்கும் என்று சந்தை வட்டாரங்கள் தெரிவித்தன.

Related posts:

நிரந்தர வீடுகளை பெற்றுத்தாருங்கள் - ஈழமக்கள் ஜனநாயக கட்சியிடம் திருமலை நீனாக்கேணி கிராம மக்கள் கோரிக...
நாடாளுமன்ற ஒழுக்கவியல் மற்றும் சிறப்புரிமைகள் குழுவின் தலைவராக சமல் ராஜபக்ஷ ஏகமனதாக தெரிவு!
நுண்நிதி கடன் வலையில் சிக்குண்டு இருநூறுக்கும் மேற்பட்டோர் தற்கொலை - சனத்தொகை புள்ளிவிபரத் திணைக்களத...

பருத்தித்துறையின் அபிவிருத்தி பின்தங்கியமைக்கு காரணமானவர்கள் கூட்டமைப்பினரே -  ஐயாத்துரை ஶ்ரீரங்கேஸ்...
இலங்கையிலும் கொரோனா மரணங்கள் சடுதியாக அதிகரிப்பு – கடந்த 24 மணி நேரத்தில் 9 மரணங்ளும் 491 பேருக்கு த...
எக்ஸ் - ப்ரஸ் பேர்ல் கப்பல் தொடர்பில் இந்திய - இலங்கை கடற்படை தளபதிகளுக்கு இடையில் விசேட பேச்சு!