மன்னாரில் இயற்கை எரிவாயு உற்பத்தி ஆரம்பிக்க தீர்மானம்!

மன்னார் கடல் பகுதியில் இயற்கை எரிவாயு உற்பத்தி ஆரம்பிக்கப்படும் என பெருந்தெருக்கள் மற்றும் வீதி அபிவிருத்தி கனியவள அபிவிருத்தி அமைச்சர் கபீர் ஹசிம் தெரிவித்துள்ளார்.
இது வரையில் 2 எரிவாயு படிகங்கள் மற்றும் கனிய வள படிகங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. ஒரு படிகத்தின் மூலம் பெறப்படும் எரிவாயுவின் மூலம் சுமார் 300 மெகாவோல்ட் வலுவை கொண்ட மின் உற்பத்தி நிலையத்தை 2000 வருட காலம் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.
இவற்றின் மூலம் நாட்டுக்கு பொருளாதார ரீதியில் பெரும் பயன்கிட்டும் என்றும் இதில் முதலீட்டாளர்களை தெரிவு செய்வதில் அரசாங்கத்திற்கும் முதலீட்டாளர்களுக்கும் இடையில் மிகவும் நெருக்கமான தொடர்பு முன்னெடுப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
Related posts:
மின் மாற்றிகள் வெடிக்க நாச வேலையே காரணம்! ஜேர்மன் குழு?
நாளை புதிய ஜனாதிபதியாக கோத்தபாய ராஜபக்ச பதவியேற்பு!
வார இறுதி நாட்களில் நாடளாவிய ரீதியில் ஊரடங்கு பிறப்பிக்கம் எண்ணம் கிடையாது - பிரதி பொலிஸ்மா அதிபர் அ...
|
|