மத்திய கிழக்கில் இருந்து இன்று அதிகாலை 447 இலங்கையர்கள் நாடு திரும்பினர்!

கொரோனா தொற்றுக் காரணமாக மத்திய கிழக்கில் சிக்கித் தவித்த 447 இலங்கையர்கள் இன்று அதிகாலை நாடு திரும்பியுள்ளனர்.
அதன்படி டுபாயிலிருந்து எமிரேடஸ்ட் ஈ.கே.648 என்ற விமானத்தினூடாக அதிகாலை 1.15 மணிக்கு 420 இலங்கையர்கள் கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தனர்.
இதனைத் தொடர்ந்து 43 இலங்கையர்களுடன் கட்டார் ஏயர்வேஸ் விமானமொன்று தோஹாவிலிருந்து அதிகாலை 1.45 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது.
மேலும் பயணக் கட்டுப்பாடுகள் காரணமாக சீனாவில் சிக்கித் தவித்த 112 இலங்கையர்கள் சாங்காயிலிருந்து நேற்றிரவு நாடு திரும்பியுள்ளனர்.
இவ்வாறு நாட்டை வந்தடைந்த அனைவரும் பி.சி.ஆர்.பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதுடன் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
Related posts:
வைத்தியசாலைகளுக்கு 5 மில்லியனில் கண்காணிப்பு கமரா!
தகவல் தரும் அலுவலர் இன்மையால் தகவலை அறிவதற்கு பொதுமக்கள் அலைச்சல்!
வடக்கில் பூரண ஹர்த்தால் - குடாநாட்டில் இயல்பு நிலை முடக்கம்!
|
|
முகக்கவசமின்றி பொதுவெளியில் நடமாடினால் 6 மாத சிறைத்தண்டனை - சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹ...
எதிர்வரும் 15 ஆம் திகதி மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் இரண்டாம் கட்டம் பொதுமக்களின் பாவனைக்காக திறக்கப...
சிறார்களின் வளமான எதிர்காலத்தை உறுதிப்படுத்த ஈ.பிடி.பி என்றும் துணையாக இருக்கும் – ஈ.பி.டி.பியின் ந...