மண்ணுலகில் இருந்து விடைப் பெற்றார் முதல்வர் ஜெயலலிதா!
Tuesday, December 6th, 2016சென்னை மெரினாக் கடற்கரையில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உடல் சந்தனப் பேழையில் வைத்து நல்லடக்கம் செய்யப்பட்டது.
அவரது உடன் பிறவா சகோதரி சசிகலா இறுதி மரியாதை செய்ய ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபன் ஜெயகுமார் வைதீக சடங்குகள் செய்தார். ராஜாஜி அரங்கில் இருந்து மெரினா கடற்கரைக்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு எம்.ஜி.ஆர். சமாதி அருகே அவரின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
வெற்றித் தாரகையக இரும்பு மனுஷியாக தமிழகத்தில் உலா வந்த மக்களின் முதல்வர் ஜெயலலிதா இன்றுடன் மண்ணுலகில் இருந்து விடைப் பெற்றார்.
Related posts:
70,000 மாணவர்கள் பாதிப்பு! - மேல் மாகாண கல்வி அமைச்சு
கலைஞர்களுக்கும் ஓய்வூதியம் வழங்க அமைச்சரவையின் அனுமதி!
சிரிய சமாதான முனைப்புக்களுக்கு உதவி வழங்கத் தயார் – ரஷ்யா, ஈரான் மற்றும் துருக்கி!
|
|