மக்கள் அச்சமடையத் தேவையில்லை – யாழ்ப்பாண மக்களுக்கு பணிப்பாளர் சத்தியமூர்த்தி தெரிவிப்பு!

யாழ்ப்பாணத்தில் மீண்டும் கோரோனோ வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது என எவரும் அச்சமடையத் தேவையில்லை என யாழ்ப்பாண போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் கோரோனா தொற்றுக்கு உள்ளாகி வெலிக்கந்தை சிகிச்சை நிலையத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டு குணமடைந்த நிலையில் வீடு திரும்பிய ஐவருக்கு நேற்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் நேர்மறை (பொசிட்டீவ்) என அறிக்கை வந்துள்ளது. எனினும் அது இறந்த வைரஸாக இருக்கலாம் என்றே நம்புறோம்.
இது தொடர்பில் சுகாதார அமைச்சுக்கும் அறிவித்தல் வழங்கியுள்ளோம். அமைச்சின் அறிவுறுத்தலுக்கு ஐவரயையும் அவர்களது குடும்பத்துடன் அவர்களது வீடுகளில் எதிர்வரும் 14 நாள்களுக்கு தனிமை படுத்தியுள்ளோம்.
ஐந்து பேருக்கும் 14 நாள்களின் பின்னர் மீண்டும் பி.சிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படும் . எனவே இதுதொடர்பில் யாழ்ப்பாணம் மக்கள் அச்சமடையத் தேவையில்லை.
ஏனெனில் இவ்வாறான சம்பவங்கள் உலக நாடுகளில் கோவிட் -19 தொற்றுக்குள்ளானவர்களிற்கும் தொற்றிலிருந்து மீண்ட பின்னரும் பரிசோதனையில் தொற்று என கண்டறியப்பட்டுள்ளது.
எனவே நேற்றையதினம் தொற்று இனங்காணப்பட்டவர்களை தனிமைப்படுத்தி உள்ளோம். இது தொடர்பில் மக்கள் அச்சமடையத் தேவையில்லை,
ஆனாலும் சுகாதார விதிகளை பின்பற்றி ஒவ்வொருவரும் தங்களது பாதுகாப்பை உறுதிப்படுத்தி தம்மை நோயில் இருந்து காத்துக்கொள்ள முன்னெச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டும்.
உலக சுகாதார நிறுவனத்தின் அறிவுறுத்தலுக்கு அமைய கோரோனா தொற்று நோயினை இல்லாதொழிக்க நீண்டகாலம் செல்லும். எனவே மக்கள் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி தமது வாழ்க்கையை கொண்டு செல்வதன் மூலமே கோரோனா தொற்றிலிருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள முடியும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
Related posts:
|
|