போதையில் நிலைதடுமாறி விபத்தில் சிக்கிய பெண்கள் – யாழ்ப்பாணத்தில் சம்பவம்!

மது போதையில் விபத்துக்குள்ளான இரு இளம் பெண்கள் பொலிஸாரால் மீட்கப்பட்டு யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் நேற்று யாழ்ப்பாணம் இருபாலைச் சந்தியில் நடந்துள்ளது. 21 மற்றும் 25 வயதுடையவர்களே விபத்துக்குள்ளாகியுள்ளனர். பிளசர் ரக மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரும் கட்டைப்பிராய் சந்திக்கு அருகில் விபத்துக்குள்ளாகியுள்ளனர். அவர்களை மக்கள் மீட்டபோது இருவரும் நிலை தடுமாறியவாறு இருந்துள்ளனர். இது தொடர்பில் கோப்பாய் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. பொலிஸார் சம்பவ இடத்துக்குச் சென்று பெண்களை மீட்டு யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்ப்பித்தனர் என்று தெரிவிக்கப்பட்டது.
Related posts:
காற்று மாசு அதிகரிப்பு - தேசிய கட்டட ஆய்வு நிறுவகத்தின் சிரேஷ்ட நிபுணர்!
நாட்டில் போதைப்பொருளுக்கு அடிமையாவோரின் எண்ணிக்கை அதிகரிப்பு - அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டு சபை தெர...
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் முயற்சியால் காப்பெற் வீதியாக புனரமைக்கப்படுகின்றது கோப்பாய் - இருபாலை ...
|
|