பொஸிஸாரை இணைத்துக்கொள்வதற்கான விண்ணப்பத்திகதி நீடிப்பு – பொலிஸ் தலைமையகம்!

ஸ்ரீ லங்கா பொலிஸுக்கு, பொலிஸ் உத்தியோகத்தர்களை இணைத்துக்கொள்வதற்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது. இவ்விண்ணப்பத்துக்கான திகதி, இன்றுடன் நிறைவடைந்துள்ள போதிலும், மே மாதம் 2ஆம் திகதி வரை குறித்த விண்ணப்பத்துக்கான முடிவுத்திகதியை நீடித்துள்ளதாக, பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.
பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட பெண் பொலிஸ் உத்தியோகத்தர்கள், கான்ஸ்டபிள்கள் மற்றும் பொலிஸ் சாரதிகள் ஆகியோருக்கான விண்ணப்பங்களே கோரப்பட்டுள்ளன. மேலும், வடக்கு மற்றும் கிழக்கைச் சேர்ந்த தமிழ் மொழி பேசத்தெரிந்த இளைஞர்கள் மற்றும் யுவதிகளை, அதிகளவில் உள்வாங்குவதற்கு எதிர்பார்த்துள்ளதாக, பொலிஸ் தலைமையகம் மேலும் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
யாழ். சந்திகளில் குவிவு வில்லைகள் பொருத்தல்!
வலி தெற்கு பிரதேசபையே எமது வயிற்றில் அடிக்காதே – ஜனாதிபதி பிரதமரிடம் நீதி கெட்டு மருதனார்மட வியாபாரி...
ஒரேநாளில் 1451 கொரோனா தொற்றாளர்கள் பதிவு !
|
|