பொலிஸ் விசேட அதிரடிப்படையின் கட்டளைத் தளபதியாக சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் எம்.ஆர்.லத்தீப் நியமனம்!

பொலிஸ் விசேட அதிரடிப் படையின் புதிய கட்டளைத் தளபதியாக சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் எம்.ஆர்.லத்தீபை பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தரவால் நியமனக்கடிதம் இன்று (18 வழங்கப்பட்டுள்ளது.
பொலிஸ் விசேட அதிரடிப் படைக் கட்டளைத் தளபதியை நியமிப்பது தொடர்பில் பொலிஸ் ஆணைக்குழு வழங்கிய பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கு பொலிஸ் மா அதிபர், இழுத்தடிப்பு செய்து வந்த நிலையில்இன்று (18) அதற்கான நியமனம் பொலிஸ்மா அதிபரால் வழங்கிவைக்கப்பட்டுள்ளது.
1979ஆம் ஆண்டு, உப பொலிஸ் பரிசோதகராக பொலிஸ் சேவையில் இணைந்த எம்.ஆர்.லத்தீப், இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் பாதுகாப்பு விவகாரம் தொடர்பில் மிக நீண்ட அனுபவம் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Related posts:
கொரோனா வைரஸ்: பாரிய அழிவுகளை உலகம் சந்திக்கும் - - பிரபல விஞ்ஞானி !
9 ஆவது நாடாளுமன்றுக்கு செல்ல மக்களால் நிராகரிக்கப்பட்ட 23 முக்கிய பிரபலங்கள் – குழப்பத்தில் ரணில் வி...
நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் கட்சி தலைவர்களுக்கிடையிலான விசேட கூட்டம் அடுத்த வாரம்!
|
|