பொலிஸ் திணைக்களத்தில் நிலவும் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு வழங்குமாறு ஜனாதிபதி உத்தரவு!

பொலிஸ் உத்தியோகத்தர்கள் எதிர்நோக்கி வரும் பிரச்சினைகளை அடையாளம் கண்டு அவற்றுக்கு துரித கதியில் தீர்வு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார்.
பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு கிராமமான முறையில் பதவி உயர்வு வழங்கப்பட வேண்டுமெனவும் வெற்றிடங்களை நிரப்புவதற்கு உரிய திட்டமொன்று முன்னெடுக்கப்பட வேண்டுமெனவும் ஜனாதிபதி பொலிஸ் மா அதிபர் மற்றும் பொலிஸ் ஆணைக்குழுவிற்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.நாட்டு மக்களுக்கு காத்திரமான சேவையை வழங்க பொலிஸ் திணைக்களத்தில் நிலவும் பிரச்சினைகள் தீர்வு காணப்பட வேண்டியது அவசியமானது என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
Related posts:
தேர்தல் சட்டமீறல் தொடர்பில் ஈ.பி.டி.பி தேர்தல் ஆணைக்குழுவில் முறைப்பாடு!
அஞ்ஞான இருளகற்றி அறிவொளி பரப்பும் எதிர்பார்ப்புடன் தீபங்கள் ஏற்றி வழிபாடுகளில் ஈடுபடுங்கள் - தீபாவள...
தொடர்ந்தும் மின்வெட்டு - நேர அட்டவணைக்கு அனுமதியளித்தது அறிவித்தது இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழ...
|
|