பொலிஸ்துறையின் தகவல் வலையமைப்பு மீது தாக்குதல்!

இலங்கை பொலிஸ் துறையின், பொலிஸ் நிலையங்களுக்கு இடையில் இலத்திரனியல் தகவல் பரிமாற்றங்களுக்கு பயன்படுத்தப்படும் மெய்நிகர் தகவல் வலையமைப்பு (VPN network) மீது வைரஸ் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.
இது குறித்து மேலும் அவர் தெரிவிக்கையில் –
“பொலிஸ்துறையின் VPN வலையமைப்பு வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாகிய போதிலும் நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இது குறித்து தொழில்நுட்ப பிரிவு விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
எவ்வாறாயினும், இந்த தாக்குதலினால், வைரஸ் பாதுகாப்புடன் இருந்த கணினி வலையமைப்பு பாதிக்கப்படவில்லை என்றும், பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவன் குணசேகர மேலும் தெரிவித்துள்ளார்.
Related posts:
இம்முறை O/L பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கு முக்கிய அறிவித்தல்!
சிகரெட்டின் விலை அதிகரிப்பு!
மிருக வதையை கட்டுப்படுத்த கட்டளைச் சட்டத்தில் திருத்தம் - வனஜீவராசிகள் மற்றும் வனப்பாதுகாப்பு அமைச்ச...
|
|