பொலிஸார் விடுத்தள்ள எச்சரிக்கை!

பிரசார கால எல்லை நிறைவடைந்த பின்னர் நேற்று நள்ளிரவுக்கு பின்னர் தேர்தல் பிரசாரங்களில் ஈடுபடுவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறையினர் எச்சரித்துள்ளனர்.
காவல்துறையின் பேச்சாளர் ருவன் குணசேகர இது தொடர்பில் விடுத்துள்ள குறிப்பில்,
நேற்று இரவுமுதல் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும்வரை அனைத்து பிரசாரங்களும் நிறுத்திவைக்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்தக்காலப் பகுதியில் வாக்காளர்கள் சுயமாக வாக்களிக்கும் வகையில் வாய்ப்புக்கள் வழங்கப்படவேண்டும் என்று அவர் கோரியுள்ளார்.
இதேவேளை சமூக ஊடகங்களின் பிரசாரங்களும் கண்காணிப்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் பிரதேச உப அலுவலகம் ஒன்று ஊர்காவற்துறை நகரில் திறந்து வைப்பு!
வவுனியா மாவட்டத்தின் கொரோனா கட்டுப்படுத்தும் செயற்பாடுகள் குறித்து ஈ.பி.டி.பி யின் நாடாளுமன்ற உறுப்ப...
அத்தியாவசிய சேவைகள் பிரகடனம் - அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலும் வெளியீடு!
|
|