பொலிஸார் மீது குண்டுத் தாக்குதல் – துன்னாலையை சேர்ந்தவர் கைது!

வடமராட்சி வல்லிபுர ஆழ்வார் கோவிலுக்கு அருகில் நாட்டு வெடிகுண்டில் சிக்கி பொலிஸார் காயமடைந்த சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர் பயங்கரவாத குற்றத்தடுப்பு பொலிஸாரினால் நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ளார்.
துன்னாலை குடவத்தை பகுதியைச் சேர்ந்த 27 வயதுடையவரே பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் கிடைத்த புலனாய்வுத் தகவல்களின் அடிப்படையில் மற்றொருவரைத் தேடிச் சென்ற நிலையில் அவருடன் தொடர்புடையவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும் மேலதிக விசாரணைகளின் பின்னரே சந்தேக நபரின் கைது தொடர்பில் தகவல்களை வழங்க முடியும் என பொலிஸார் கூறியுள்ளதாகவும் தெரியவருகின்றது.
Related posts:
வெளிநாட்டு நீதிபதிகளை அழைக்க வாய்ப்பில்லை - அமைச்சர் மங்கள சமரவீர!
பொருளாதாரத்தைப் பலப்படுத்தவே பொருளாதார சபை - ஜனாதிபதி!
மட்டுப்படுத்தப்பட்ட வைத்திய வசதிகளே காணப்படுகிறன - பொதுமக்கள் மிக அவதானமாகச் செயற்பட வேண்டுமென மாவ...
|
|