பொது மன்னிப்பு வழங்கும் 902 பேரின் பெயர்ப் பட்டியல் ஜனாதிபதியிடம் கையளிப்பு !

பொதுமன்னிப்பு வழங்குவதற்கு தகுதிபெற்றுள்ள 902 பேரின் பெயர்ப் பட்டியல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
சிறு குற்றங்களுடன் தொடர்புடையோருக்கே ஜனாதிபதியின் அனுமதியுடன் பொது மன்னிப்பு வழங்கப்படவுள்ளது.
ஜனாதிபதி சட்டத்தரணி காலிங்க இந்திரதிஸ்ஸ தலைமையில் கைதிகள் மற்றும் அவர்களின் விடுதலை குறித்து ஆராய்வதற்காக அண்மையில் ஜனாதிபதியினால் குழுவொன்று நியமிக்கப்பட்டது.
கொரோனா தொற்றை கட்டுப்படுத்தல் மற்றும் சிறைச்சாலைகளில் நிலவும் நெருக்கடியை குறைக்கும் நோக்கில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
மாகாணசபை தேர்தல் விவகாரம் - தொடரும் இழுபறி நிலை - பொது இணக்கப்பாட்டை வரும் புதனன்று தெரிவிக்குமாறு க...
நாட்டில் மீண்டும் இடைக்கிடையே மின்வெட்டு - மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு!
சுவரொட்டிகளை அகற்ற 758 இலட்சம் ரூபா நிதி பொலிஸாருக்கு ஒதுக்கீடு - தேர்தல்கள் ஆணைக்குழுவில் இடம்பெற்ற...
|
|