பொதுமன்னிப்புக் காலம் அறிவிப்பு!

Sunday, June 5th, 2016

இராணுவத்திலிருந்து முறையாக விலகிச் செல்பவர்களுக்கு பொது மன்னிப்புக் காலமொன்று அறிவிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

நீண்ட காலமாக உரிய விடுமுறையின்றி சேவைக்கு திரும்பாத முப்படையைச் சேர்ந்த படை அதிகாரிகள் மற்றும் உத்தியோகத்தர்களுக்கு இவ்வாறு பொது மன்னிப்பு வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பொது மன்னிப்புக் காலத்தில் முறையாக படைச் சேவையிலிருந்து விலகிக்கொள்ள முடியுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மாதம் 13ஆம் திகதி முதல் 30 ஆம் திகதி வரை இந்த பொதுமன்னிப்புக் காலம் அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது

Related posts: