பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலைகளை அதிகரிக்க் வாய்ப்பு – பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் தெரிவிப்பு!

பாண், பணிஸ் உள்ளிட்ட பேக்கரி உற்பத்திகளின் விலை அதிகரிக்கப்படவுள்ளதாக பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் எம்.கே. ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
பேக்கரி உற்பத்திகளுக்கான மூலப் பொருட்களின் விலையில் ஏற்பட்டுள்ள அதிகரிப்பால், பாண், பணிஸ் உள்ளிட்டவை குறைந்தபட்சம் 10 ரூபாவால் அதிகரிக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பார்ம் எண்ணெய்க்கு ஒரு லீற்றருக்கு 250 ரூபா வரி அறவிடப்படும் நிலையில், அதன் விலை 500 ரூபாவாகவும், மாஜரின் ஒரு கிலோவுக்கு 600 ரூபா வரி அறவிடப்படும் நிலையில் 1000 ரூபாவாகவும் உயர்வடைந்துள்ளதால் பேக்கரி உற்பத்திகளின் விலையை அதிகரிக்காமல் இருப்பது சாத்தியமற்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
பேக்கரி பண்டங்களின் விலையை அதிகரிக்காமல் இருக்க, சலுகைகளை கோரி ஜனாதிபதிக்கும், பிரதமருக்கும் கோரிக்கைகளை முன்வைத்த போதும் அவர்கள் அதற்கான எந்த பதில்களையும் இதுவரை வெளிப்படுத்தாமையால், பேக்கரி பண்டங்களின் விலைகளை அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் குறித்த சங்கத்தின் தலைவர் ஜயவர்தன சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|