புதையல் தோண்டும் கருவியுடன் சென்ற நால்வர் கைது!

ஏ-9 வீதியில் சென்ற அதி சொகுசு கார் ஒன்றினை வவுனியாவில் அதிரடிப்படையினர் சுற்றிவளைத்து அதில் பயணித்த நான்கு பேரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை காலை இடம்பெற்றுள்ளது.
கைது செய்யப்பட்ட நபர்களிடம் இருந்து நிலத்தடியில் புதையலை கண்டுபிடிக்கும் ஸ்கானர் ஒன்றையும் அதிரடிப்படையினர் கைப்பற்றியுள்ளனர். இதேவேளை கைது செய்யப்பட்ட நால்வரையும் அதி சொகுசு காரையும் வவுனியா பொலிஸ் நிலையத்தில் அதிரடிப்படையினர் ஒப்படைத்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
Related posts:
நட்பு நாடுகளின் பொருட்களுக்கு வரியை குறைக்கிறது சீனா !
யாழ். மாவட்டத்தில் 14565 பேர் தொழில்வாய்ப்புக்களை தேடுகின்றனர் - மாவட்டச் செயலகம் தகவல்!
எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அருகில் பொலிசாரை கடமையில் ஈடுபடுத்த நடவடிக்கை - பொலிஸ் மா அதிபர், அ...
|
|