புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களை எதிர்வரும் 15 ஆம் திகதிக்கு முன்னர் பதிவு செய்யுமாறு நாடாளுமன்ற பிரதி செயலாளர் நாயகம் வேண்டுகோள்!

நடந்துமுடிந்த நாடாளுமன்ற தேர்தலில் வெற்றிபெற்று நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டவர்களை எதிர்வரும் 15 ஆம் திகதிக்கு முன்னர் பதிவு செய்யுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பதிவு நடவடிக்கைகள் Online மூலமாக முன்னெடுக்கப்படவுள்ளதாக நாடாளுமன்ற பிரதி செயலாளர் நாயகம் நீல் இத்தவெல தெரிவித்துள்ளார்.
இதன்மூலம் உறுப்பினர்கள் நாடாளுமன்றத்திற்கு வருகைதராது, தமது பெயரை பதிவு செய்துகொள்ள முடியும் என அவர் கூறியுள்ளார்.
தெரிவு செய்யப்பட்டுள்ள உறுப்பினர்களின் கல்வித் தகைமை, தொழில் தகைமை, நிழற்படம் மற்றும் சமயம் ஆகியன தொடர்பாக தகவல்கள் சேகரிக்கப்படவுள்ளன.
www.parliament.lk எனும் இணையத்தள முகவரியினூடாக புதிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களை பதிவு செய்து கொள்ள முடியும் என நாடாளுமன்ற பிரதி செயலாளர் நாயகம் தெரிவித்தள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
வடக்கு – கிழக்கு காணிப் பிரச்சினையை தீர்க்க விசேட வேலைத்திட்டம் - அமைச்சர் கயந்த
வல்வெட்டித்துறையில் நடந்த இந்திர விழா: ஆயிரக்கணக்கில் மக்கள் அணிதிரள்வு!
2021 வாக்காளர் பட்டியல் திருத்தங்களை ஒன்லைனில் மேற்கொள்ளலாம் - தேசிய தேர்தல் ஆணைக்குழு தெரிவிப்பு!
|
|